tngea

Pages

Saturday, November 12, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
நன்றி தினகரன் சென்னை 12-11-11


சென்னை, நவ. 11: மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி இம்மாதம் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம். பழனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் என். செல்லபாண்டியன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.

"கிராம ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மக்கள் நலப் பணியாளர்களுக்கான பணியிடங்களை கடந்த 2.9.1989 அன்று அப்போதைய தி.மு.க. அரசு உருவாக்கியது. அதன்படி நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி 13.7.1991 அன்று அப்போதைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 24.2.1997 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் 1.6.2001 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டுமொரு முறை பணியிலிருந்து நீக்கப்பட்டனர். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், 12.6.2006-ல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

இந் நிலையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி இம்மாதம் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் இருப்பதால், மக்கள் நலப் பணியாளர் என்ற பணியிடங்கள் தேவையற்றதாக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் உண்மையில்லை. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஏராளமானவை காலியாக உள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, இது அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதே உண்மையாகும்.

இந்த அரசாணை சட்ட விரோதமானதாகும். எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீது நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆர். வைகை, எல். சந்திரகுமார் ஆகியோர் ஆஜராகி, அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாக இல்லை என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மக்கள் நலப் பணியாளர்களின் பணிக் காலம் 31.5.2012 வரை என வரையறுக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

மனுதாரர்கள் சார்ந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மக்கள் நலப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, அந்த சங்க உறுப்பினர்களின் பட்டியல் சனிக்கிழமை (நவ. 12) மாலை 4 மணிக்குள் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால், இந்த இடைக்காலத் தடையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 10-ஆம் மாநில மாநாடு


கிருஷ்ணகிரி - நவம்பர் 17,18,19,

Monday, March 28, 2011

சொன்னதும் செய்ததும்

மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதலிடம் -க.ராஜ்குமார் நன்றி தீக்கதிர் 28-03-11 எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியத் திட்டத்தை தனியார்மயமாக்கிட வழிவகுக்கும் சட்டமுன்மொழிவினை ஆட்சி யாளர்கள்; அறிமுகப்படுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கிட வழி வகுக்கும் மசோதா கடந்த 10 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பாஜகவின் ஆதரவுடன், காங்கிரஸ் இன்று மீண்டும் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப் பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பிரதமர் மீது உரிமைமீறல் பிரச்சனையை நடப்புக் கூட்டத்தொடரில் கிளப்பிய பி.ஜே.பி., ஓய்வூ திய மசோதாவை காங்கிரஸ் கொண்டுவரும் போது அதை ஆதரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பெருமையுடன் பீற்றிக்கொண்டுள்ளார். தொழிலாளர்களின், மத்திய-மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இடதுசாரிகளின் கரங் களை பலப்படுத்துவதே இன்றைய தேர்தல் கால உடனடி தேவையாக உள்ளது. ஓய்வூதி யத் திட்டம் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதுடன் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் கேரளம், திரிபுரா ஆகிய மாநி லங்களில் அதை அமல்படுத்த மறுத்துவருப வர்கள் இடதுசாரிகள். இன்று இந்திய நாட் டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளை விக்கும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதும், அவர்களை பலகீனப்படுத்துவதுமே இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இந்த அடிப்படையி லேயே இன்று தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அணி உருவா கியுள்ளது. இந்த அணியினை வெற்றிபெறச் செய்வதே இன்று நம்முன் உள்ள பணியாகும். திமுகஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இன்று தேர்தல் நடத்தும் துறையான வருவாய்த்துறையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில், காலி ஏற் பட்ட 4000 கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே துறையில் 3000-க்கும் மேற்பட்ட உதவியா ளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகின்ற மற் றொரு துறையான ஊரக வளர்ச்சித்துறையில் 3000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக வுள்ளன. இது துணை முதல்வரின் பொறுப் பில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறைகளில் கேந்திரமான, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். வாய்கூசாமல் காலிப் பணியிடங்களை நிரப்பிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். வருவாய்த்துறையில் வட்டாட்சியருக்கும், ஊரகவளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்களின் பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, தனி ஊதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஆணையிட்டவர்கள் ஒரே மாதத்தில் அதை இரத்து செய்து ஆணையிட்டுள்ளனர். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூ திய முறையை ஒழிப்போம்” என்றார்கள். ஆனால் சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து, ஊழியர் களை ஏமாற்றினார்கள். ஊதியக்குழுவால் நிர் ணயிக்கப்பட்ட ஊதியம் கேட்டுப் போராடிய சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை பணியிலிருந்து நீக்கினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிப் போம் என்றவர்கள், அதை செய்திடக் கேட்ட சாலைப்பணியாளர்களை காவல் துறையின ரை வைத்து அடித்து காயப்படுத்தினர். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு பணியாத அரசுஊழியர்களை அலுவலகத்திற் குள் புகுந்து தாக்கி காயப்படுத்தினர். மணல் கொள்ளையில் சமூகவிரோதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு அரசுஊழியர்களின் உயிருக்கு உலைவைத்தனர். கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என கடந்த தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த வுடன் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை யின் மூலம் அடக்குமுறையை ஏவினர். அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீ காரம் கொடுப்போம் என்று சொன்னவர்கள், அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக ளுக்கு ஒத்திசைக்க அரசு ஊழியர் சங்கம் தயாராக இல்லை என்பதால் அங்கீகாரம் கொடுக்க மறுத்தனர் . சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சனை களை தீர்ப்போம் என்று சொன்னவர்கள், பேச சென்றவர்களை காவல்துறையை வைத்து அடித்து உதைத்து அனுப்பினர். சொன்ன தைச் செய்வோம் என்று சொன்னவர்கள், 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஓராண்டு கழித்து அறிவித்தார்கள். மத்திய அரசு வழங்கிய வீட்டுவாடகைப்படியோ, போக்குவரத்துப்படியோ வழங்க மறுத்துவிட் டனர். மத்திய அரசு மகப்பேறு விடுப்பு 18 மாதங்கள் என்று வழங்கியுள்ள நிலையில் அதை தருவதற்கு தயாராக இல்லாதவர்கள், இன்றும் திமுக தேர்தல் அறிக்கையில் 4 மாதம் தருவோம் என்று அறிவி;த்துள்ளார்கள். ஊதியமாற்ற ஆணைகளில் குழப்பங்களை விளைவித்து ஊழியர்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயற்சித்தனர். முரண்பாடு களே இல்லை என்று ஏகடியம் செய்தவர்கள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையில் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் முரண்பாடுகளை நீக்க மீண்டும் ஒரு குழுவினை அமைப்பதாக தெரிவித்துள்ளனர்! இனியும் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிட அரசுஊழியர் கள், ஆசிரியர்கள் தயாராக இல்லை. சொல் வது ஒன்றும் செய்வது ஒன்றுமான இவர்க ளின் கபட நாடகத்தை புரிந்து கொண்டுவிட் டனர். ஆடு நனைகிறதே என்று கவலைப் பட்ட ஓநாய்களை அரசுஊழியர்கள் அடை யாளம் கண்டுகொண்டுவிட்டனர். -கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்

Sunday, March 20, 2011

கவலை அளிக்கும் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள்

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 19-03-11
அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட விடைத்தாள்கள் எதற்காக திருத்தப்பட்டன என்பது குறித்து தேர் வாணையம் உரிய காரணத்தை சொல்ல வில்லை என்றும் இதன் மூலம் தேர்வா ணையம் உரிய நடைமுறைகளை பின் பற்றவில்லை என்பதும்; தெரியவருகிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வாணையம் ஒரு சிலரின் விருப்பத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது அதன் பொருளாகும். இப்படி பணிநியமனம் செய் யப்பட்டவர்கள் அரசுப் பணியில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், பதவி உயர்வு பெற்று இருந்தாலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தேர்வாணையம் இந்த தீர்ப்பினை அமல்படுத்த தயாராக உள் ளதா என்பதே இப்போது நம்முன் எழுந் துள்ள கேள்வியாகும். ஏனெனில் சமீப காலமாக தேர்வாணையத்தின் நடவடிக் கைகள் தேர்வு எழுதும் போட்டியாளர் களின் அதிருப்திக்கு ஆளாகி, நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்வாணையம் முன்வரவேண்டும்.

இந்நேர்வில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தி னை மட்டும் நீதிமன்றம் சொல்லியுள்ளது. இந்த தவறுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை கண்டறிந்தும், இத் தகைய பணி நியமனம் பெற்றவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என் பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இவ்வாறு தவறான வழியில் நியமனம் பெற்றவர்கள், பணி நியமனத் திற்காக தாங்கள் இழந்தவைகளை வட்டி யும் முதலுமாக திரும்பப் பெறும் ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்பதே பெரும்பாலானோர் கருத்தாகும்.. இவர்களின் பின்னால் உள்ள செல்வாக் குப் பெற்ற அந்தப் புள்ளிகள் யார் என்ப தையும் அறிய தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஒரு நேர்வில் மட்டு மல்லாமல் இதற்குப் பின்னர் நடைபெற் றுள்ள தேர்வுகள் குறித்தும் ஒரு திறந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் தமி ழக அரசின் பல்வேறு துறைகளில் கொல் லைப்புற வழியாக நியமனம் பெற்ற அதி காரிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடு கிறது. வணிகவரித்துறை போன்ற துறை களில் தவறான சான்றிதழை கொடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் மீது நடவடிக் கை எடுக்க அரசு தயங்கிவருகிறது. பதவி உயர்வை இரத்து செய்ததே போதுமானது என அரசு கருதுகிறது போலும். சமீபத் தில் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு வந்த பைலட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக 4000-க்கும் மேற்பட்ட பைலட்டுகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வரப்படு கின்றன என்ற செய்தியும் வெளியாகி யுள்ளது. இத்தகைய நெஞ்சுறுதி தமிழக அரசிற்கு மட்டும் ஏன் இல்லை?

யாரை வேண்டுமானாலும் அவர்க ளின் செல்வாக்கைப் பொறுத்து எந்தப் பணியிலும் நியமனம் செய்யலாம் என்பது தானே தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது? குரூப்-1 குரூப்-2 ல் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றக் கூடியவர்களாக உள்ளனர். இவர்களின் நியமனத்தில் குறுக்கீடுகள், குளறுபடிகள் என்றால் அது எங்கே போய்முடியும்? தேர்வாணை யத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நேர்காணலும் நியாயமான முறையில் தான் நடைபெறுகிறதா என்பதை மக்க ளுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்வாணையத்தின் மீது தற்போது விழுந்துள்ளது.

ஏனெனில் சமீபகாலமாக தேர்வா ணையத்தின் நடவடிக்கைகளில் தடு மாற்றம் காணப்படுகிறது. அரசுப் பணி யாளர் தேர்வாணையம் ஒரு சுயேச் சையான அதிகாரம் பெற்ற ஒரு அமைப் பாகும். ஆனால் சமீபகாலமாக அதன் நடவடிக்கைகள் தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு துறை நடவடிக்கை போன்றே இருந்து வருகிறது. அதனால்தான் என்னவோ தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தேர்வாணையமும் தப்பவில்லை. தற்போது 30 விழுக்காட் டிற்கு மேல் அங்கு பணியிடங்கள் காலி யாகவுள்ளது. அரசுப் பணிக்கு தேர்வு செய்யும் தேர்வாணையத்திலேயே பணி யிடங்கள் காலியாகவுள்ளன என்பது விந்தையிலும் விந்தையாகும்.

இதனால் தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்றைக்கு போட்டியாளர்களை நீதிமன்றத்திற்கு தள்ளியுள்ளது. சமீபகாலமாக தேர்வா ணையம் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் அது குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை முதலில் தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, தேர்வு செய்தபின், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பணி நிய மனம் வழங்க முடியாமல் தேர்வாணை யம் திணறிக்கொண்டு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசின் பல்வேறு துறைகளில்; பணியாற் றிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய குரூப்-4 சிறப்பு தேர்வு நடத் தப்பட்டு, 9000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, நாளதுவரை 1000க் கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு குரூப்-2 க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு இதுவரை முழுமையாக முடிவு வெளி யிடப்படாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஒரு குரூப்-2 தேர்வினை தேர்வாணையம் நடத்திட அறிவிக்கை செய்துள்ளது. சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கையில், வருவாய்த்துறை, வணிகவரித்துறைப் போன்ற துறைக ளில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங் கள் தமிழக அரசின் ஸ்டாப் கமிட்டியின் முடிவிற்கு உட்பட்டது என அறிவித்துள் ளது. ஸ்டாப் கமிட்டி என்பது தமிழக அரசு பிறப்பித்துள்ள மறைமுக பணிநியமன தடை ஆணையின் ஷரத்துகளில் ஒன் றாகும். இதற்கு தேர்வாணையமும் கட்டுப் பட்டது என்பதே அறிவிக்கையில் வெளி யிடப்பட்டுள்ள செய்தியாகும். சென்ற ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை நிரப்பிட அறிவிக்கை செய்யப்பட்டு, மேலும் அரசின் அறிவுறுத் தலின்படி கால நீட்டிப்பு செய்து இது வரை தேர்வினை நடத்த முடியாமல் தேர் வாணையம் திணறி வருகிறது. முரண் பாடுகளின் மொத்த உருவமாக இப்போது தேர்வாணையம் உள்ளது. அரசுப் பணிகளுக்கு பணி நியமனம் செய்யும் தேர்வாணையம் மக்களின் நம்பிக் கையை இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 70 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தேர்வாணையம் விளையாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Wednesday, March 9, 2011

உலக மகளிர் தினம்

பெண்கள் உரிமை போற்றுவோம்
க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் - 8-03-11
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ரொட்டியும் ரோசாப்பூவும்

தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.

மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம்

1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டில் பெண்கள் நிலை

நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.

பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.

மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.

இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது.

பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,

வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்

இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு 101-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்

Monday, March 7, 2011

ஒப்புதல் வாக்குமூலம்

கலைஞர் அரசின் ஒப்புதல் வாக்குமூலம்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 7-03-11
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் கலை ஞரின் அரசு, ஊதிய மாற்ற ஆணைகளில் குளறுபடிகள் உள்ளன என ஒப்புக் கொண்டு, அவற்றை இரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை, 26.2.2011 தேதியிட்ட, அ.ஆ. நிலை எண்.71 ஆணையில், பத்தி 6ல் “ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சீரமைக்கும் வகை யில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட் டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது” என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. இந்த ஆணையில், வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை, நெடுஞ் சாலைத்துறை, ஊரக வளர்ச் சித் துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, தொழிற் சாலை ஆய்வகத்துறை, மாநில சுகாதார போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, மாற்றுத் திற னாளிகள் மறுவாழ்வு ஆணை யரகம், பேரூராட்சிகள், மின் ஆய்வுத்துறை, சென்னை மாநக ராட்சி, இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை என 18 துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தொகுப்பு ஊதியம் மற்றும் தர ஊதியத்தை குறைத்தும், மாற்றியும் அரசு ஆணையிட்டுள்ளது. இணை இயக்குநர்களுக்கு ஊதியம் (யீயல க்ஷயனே) ரூ.37,400-67,000 தரஊதியம், (ழுசயனந ஞயல) ரூ.8,700 என வழங்கப்பட்டதை அதிரடி யாக ஊதியம் ரூ.15,600-39,100, தரஊதியம் ரூ.7,600 என குறைத்து ஆணையிட்டுள்ளது.

எஸ்.மாலதி இ.ஆ.ப., தலை மையிலான அலுவலர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு ஊதிய மாற்ற ஆணை களை பிறப்பித்தபோது, அதில் முரண்பாடுகள் உள்ளன என் பதை சுட்டிக்காட்டிய ஒரே சங் கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இதற்காக அச்சங்கத் தின் பொறுப்பாளர்கள், முர சொலியின் வசவையும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதா யிற்று. முரசொலி, ஊருக்கெல் லாம் ஒரு வழி என்றால் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் களுக்கு ஒரு வழி எனவும், கட்டிய வீட்டிற்கு திருஷ்டி பூசணிக்காய் போன்றவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் எனவும் கேலி செய்து எழுதியது. தற்போது வெளியிடப் பட்டுள்ள அரசு ஆணையில், பத்தி 3ல், 5-வது வரியில், “அலு வலர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு களை களைவதற்கு அரசு ஒரு நபர் குழுவை நியமித்து ஆணை கள் வெளியிட்டது” என அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள் ளது. இதற்கு முரசொலி என்ன சொல்லப் போகிறது?

ராஜிவ்ரஞ்சன் இ.ஆ.ப., தலைமையில் ஒரு நபர் குழு வினை அமைத்தபோது, அப் போதும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என அரசு ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்தது. முரண்பாடுகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக அரசு பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது. அதுவும் பலனற்றுப் போன நிலையி லேயே ஒரு நபர் குழுவின் அறிக் கையின் அடிப்படையில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக முரண்பாடுகள் மேலும் அதிகரிப்பதற்கு அது வழி வகுத்தது. அலுவலர் குழு மற் றும் ஒரு நபர் குழுக்களின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்திதான் அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து இயக்கம் கண்டு இரத்தம் சிந்தியது.

தற்போது மேற்கண்ட ஆணை (71) பிறப்பித்ததின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. ஊதியம் குறைக் கப்பட்ட பிரிவினர் ஏமாற்ற மடைந்து, கோபமடைந்துள் ளனர். அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களில் இன்னும் சில ருக்கு மத்திய அரசிற்கு இணை யான ஊதியமே வழங்கப்படாத நிலையில், சிலருக்கு மேம்படுத் தப்பட்ட ஊதியம் வழங்கப்பட் டிருப்பது, ஊழியர்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க சங்க நிர்வாகி களை அரசு நேரடியாக அழைத் துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும்.

அலுவலர் குழுவும், ஒரு நபர் குழுவும் உருவாக்கியுள்ள பிரச் சனைகள் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதைத்தான் அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த ஆணை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலை உருவான தற்கு ஒரு சில அதிகாரிகளே காரணமாவர். அரசிற்கு அவப் பெயரை உருவாக்கி, ஊழியர்க ளிடையே குழப்பத்தை உருவாக் கியவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றது? அரசு ஊழியர்கள் தங்க ளின் பணிக்காலத்தில், மேற் கொண்ட பணிகளினால், அர சிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கருதினால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பணி ஓய்வு பெறுவதற்கு கூட அவர் கள் அனுமதிக்கப்படுவ தில்லை. அப்படியிருக்க, லட் சக்கணக்கான ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான ஆணை யில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதை அரசு உண ருமா? அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க முன்வருமா? என அரசு ஊழியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

Sunday, March 6, 2011

தமிழக அரசிற்கு கண்டனம்

அரசு ஊழியர்கள் கோரிக்கை மீது தவறான தகவல்களை கூறுவதா? அரசுக்கு தமிழ்செல்வி கண்டனம்
நன்றி தீக்கதிர் 6-03-11
திருவாரூர், மார்ச் 5-

அரசு ஊழியர்களின் சம் பள விகிதம், பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளில் தமிழக அரசு மோச டியான தகவல்களை கூறுவது சரியானதல்ல. இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஆர். தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். திருவாரூரில் சனிக்கிழமை யன்று நடைபெற்ற அரசு ஊழி யர் சங்க விளக்க கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1984 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு போராட் டங்களை நடத்தி உள்ளது. அரசு ஊழியர்கள் நடத்துகிற போராட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு தவறான தகவல் களை தருவதும், இவர்கள் சம்பள உயர்வுக்காக மட்டுமே போராடக் கூடியவர்கள் என்று விமர்சிப்பதும் மிகவும் தவ றானது.

அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட பல் வேறு வாக்குறுதிகள் முதல் வரால் வழங்கப்பட்டன. இன் றும் கருணாநிதி முதல்வராக இருக்கும் நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. கூடுதல் வேலை நேரம், பணிச்சுமை, ஆள்பற் றாக்குறை, காலிப்பணியிடம் போன்ற பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. 1989-90 களில் கருணாநிதி அரசு கலைக்கப் பட்ட போது, இது ஜனநாயகத் திற்கு விரோதமானது என்று கூறி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து தங்களின் ஒருநாள் ஊதியத்தை இழந்த னர். அத்தகைய ஜனநாயக உணர்வோடுதான் இன்றும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக முறை யில் போராடி வருகின்றனர்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது இதையெல்லாம் ஆதரித்த முதல்வர் கருணா நிதி, தற்போது போராடும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறை யினரை கொண்டு மிருகத்தன மான முறையில் தடியடி நடத் துகிறார். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலை யில், பணிநியமனங்கள் குறித் தும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் மோசடியான தக வல்கள் தெரிவிக்கப்பட்டுள் ளன. விலையேற்றத்தின் கார ணமாக ஊழியர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை நிலை என்பது இன்று மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறை யில் உண்ணாவிரத அறப் போராட்டத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தியது. பலமுறை முதல்வரை சந்தித்து எங்க ளின் கோரிக்கைகளை முன் வைத்து முயற்சி செய்தபோது, அரசியல் சாயம் பூசப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகளால் மறுக் கப்பட்டது. 4 ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஊழியர்கள் சம்ப ளம் வழங்கப்பட்டதாக தவ றான புள்ளி விவரம் அளிக் கப்படுகிறது. 2900 கோடி ரூபாய் மட்டுமே அரசு ஊழியர் கள் சம்பளம் பெற்றுள்ளனர் என்றால், இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டாமா? இந்த ஆட்சியை பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல் மலிந்தவர்களாக உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் இந்த ஆட்சிக்கு மிகுந்த அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தான் தமிழக முதல மைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை கூறமுடிந்தது.

தமிழக முதல்வருடன் நடத்திய பேச்சு வார்த்தை தொடர்பான விளக்க கூட்டம் சங்க மாவட்ட தலைவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் க.சிவக் குமார், மாவட்டச் செயலாளர் ஜி.பைரவநாதன், மாவட்ட பொருளாளர் எம்.சவுந்தராஜன், மாவட்ட நிர்வாகிகள் ராஜ ராஜன், ராகுலன், வேலாயுதம், வட்டநிர்வாகிகள் தியாகராஜன், காளிதாஸ் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்து வட்ட கிளை நிர்வாகிகள், ஏராளமான பெண் ஊழியர்கள் கூட்டத் தில் கலந்து கொண்டனர்.

Monday, February 28, 2011

சாலைப் பணியாளர்களுக்கு யார் வேலை கொடுத்தது

அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!
-க.ராஜ்குமார்

நன்றி தீக்கதிர்
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள் ளார். இது ஏதோ தவறுதலாக சொல்லப்பட்டது என கருத வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழ் நாடு அரசுஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு சென்னையில் 19-08-2007-ல் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் அந்த மேடையிலும் இதே தவறான தகவலை தெரிவித்தார். அதற்கு சாலைப் பணியாளர் சங்கத்தின் அன்றைய மாநிலத் தலைவர் சண்முகராஜாவும், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்துவும் மறுத்து அறிக்கை விட்டனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இன் னொரு தவறான தகவல் கடந்த 25-02-11 அன்று முதல்வரின் கோபாலபுர இல்லத்தில் சாலைப் பணியாளர்களின் பிரதிநிதிகளாக தான் ஐந்தாறு பேரை சந்தித்ததாக குறிப்பிட் டுள்ளார். இந்த ஐந்தாறு பேர் யார் யார் என்பது கூட முதல்வர் அறியவில்லை போலும். கலைஞர் முதல்வராக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் தங்கள் மாநாட்டிற்கு தவறாமல் இதுவரை அழைத்து வருகின்ற சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன், மாநிலப் பொருளார் என்.இளங்கோ, மாநிலச் செயலாளர் மு.அன்பரசு மற்றும் மாநில துணைத்தலைவர் ப.ரவி ஆகியோர் முதல் வரை சந்தித்துள்ளனர் என்பது கூட முதல் வர் அறிந்திருக்கவில்லை என்பது வினோத மாக உள்ளது. அல்லது அரசு ஊழியர் சங் கத்தை அறியாதவராக தன்னை காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சிக்கிறாரா?

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றப்படும் என வாக்குறுதி தந்த திமுக அரசு, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அதை செய்ய தவறியதை கண்டித்துத்தான் சாலைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டபோது ஒன்றுபட்டு போராடி மீண்டும் பணிபெற்ற சாலைப் பணியாளர் சங்கத்தை பிளவுபடுத் தியது திமுக ஆட்சியாளர்கள்தான் என்பதை சாலைப் பணியாளர்கள் நன்கு உணர்வர்.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்த தோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டி ருப்பதாக குறிப்பிட்டிருப்பதுதான். கடந்த 25 ஆண்டுகாலமாக காலமுறை ஊதியம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சத்து ணவு ஊழியர்களுக்கு கலைஞர் தந்திருப்பது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்படாத ஊதி யம்தான் என்பதை மறைக்க முதல்வர் முயல் கிறார். 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை ஏற்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊதிய மாற்ற ஆணையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.4800 மற்றும் தரஊதியம் ரூ.1300 (ரூ.5100) ஆகும். ஆனால் சத்துணவு ஊழியர் களுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் சிறப்பு காலமுறை ஊதியமோ ரூ. 2500 மற்றும் தர ஊதியம் ரூ.500 (ரூ.3000) ஆகும். கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இது காலமுறை ஊதியம் அல்ல, கலைஞரின் அதிகாரிகளின் அண்டா மூளைகளால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு (!) காலமுறை ஊதியம்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தை பொறுத்தவரை, புதிய ஓய்வூதிய திட் டமும் இல்லாமல் பழைய ஓய்வூதிய திட்ட மும் இல்லாமல் புதிதாக ஒரு சிறப்பு(!) ஓய் வூதிய திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.700,600,500 என கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுவிட்டு ஓய்வ+தியம் வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாக தவறான தக வலை தனது கடிதத்தில் தந்துள்ளார். ஒப் புக்கு கலைஞர் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்துள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியம் என்றே எடுத்துக்கொண் டாலும் அதில் 50 விழுக்காடு மாத ஓய்வூதி யமும், பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருப் பதைப் போல் கருணை கொடையும் வழங்கி யிருக்க வேண்டும். அதுவும் கூட வழங்கப் படவில்லை என்பதுதான் உண்மை.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல் 1-1-2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும். தமிழக அரசு ஆணையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1-1-2006 முதல் கருத்தியலாகவும் 1-1-2007 முதல் தான் நிதிப்பயனும் தரக்கூடிய வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது முதல்வ ருக்கு தெரியாதா? இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசு தனது ஊழியர் களுக்கு தந்திருப்பது போல் 1-1-2006 முதல் நிதிப்பயன் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருவதை அதிகாரிகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லையா?

செய்யாததை எல்லாம் செய்ததாக, அதி காரிகள் எழுதி தந்ததையெல்லாம் சாதனை யாக அறிக்கையாக வெளியிடுவது முதல்வ ருக்கு இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இந்த 5 ஆண்டுகாலத்தில் திரும்பத் திரும்ப பணி நியமனத் தடை ஆணை திமுக ஆட்சி யில் அகற்றப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆட்சியில் பணி நியமனத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதும், அதே ஆட்சி யின் இறுதியில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் (அரசு ஆணை எண்.14 ப.ம.நி.சீ.தி.து நாள் 7-2-2006 ) அனைவரும் அறிந்ததே. திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நியமனங்க ளுக்கு மறைமுகமான தடை (நிபந்தனைகள்) விதித்து அரசு ஆணை எண்.91 ப.ம.நி.சீ.தி.து. நாள் 7-6-2006) பிறப்பித்தது என்பதுதான் உண்மையாகும். தமிழக அரசு 4 லட்சம் பணி யிடங்களுக்கு மேல் நிரப்பியதாக திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு, இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப் பட்டவர்களைப் போல் ஒரு தோற்றத்தை தமிழக மக்களிடையே உருவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. ஏமாறப் போவது மக்கள் அல்ல; ஆட்சியாளர்களே!

கடந்த 25-02-11 அன்று முதல்வர் தனது இல்லத்தில் சந்தித்த தலைவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள். இவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வருக்கு எப்படி ஏற்பட்டது. ஊதியக்குழு ஆணையில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமையில் கடந்த 23-02-11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தை கலைஞரின் அரசு கண்டும் காணாமல் விட்டதின் விளைவாக சங்கத் தின் பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை நோக்கி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க ஊர் வலமாக புறப்பட்டனர். அவர்களைத்தான் காவல் துறை முன்னே போகவிட்டு பின்னே தாக்கியுள்ளது. ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்த ஊழியர்கள் காவல் துறையால் கடுமை யாக தாக்கப்பட்டு, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி அன்றைய தினம் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளி யேறி ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் கிடைத் தவுடன்தான் அரசு முழித்துக்கொண்டு, முதல்வரின் காதுக்கு செய்தி சென்று முதல் அரசுஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார்.

கலைஞரின் பொறுப்பில் உள்ள காவல் துறை கடந்த 5 ஆண்டு காலத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய தையும், சட்டக்கல்லூரி மாணவர்களின் தாக்குதலை கண்டுகளித்ததையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள், தங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப் பட்டுவிட்டது என நீதிமன்றங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மக்க ளின் ஏளனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி யுள்ள நிலையில் இன்று அரசுஊழியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய கலைஞரின் காவல் துறை அரசு ஊழி யர்களை கண்மூடித்தனமாக தாக்கி காயப் படுத்தியுள்ளது. காவல் துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் கண்டித்துள்ள நிலையில் ஒன்றும் நடைபெறாதது போல் கலைஞர் காட்டிக் கொள்ள முயல்வார் என்றால், அவருக்கு தக்க பாடத்தை அரசு ஊழியர்கள் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Sunday, February 27, 2011

அரசு ஊழியர் மீது தடியடி

அரசு ஊழியர் மீதான தடியடி: தேமுதிக கடும் கண்டனம்
சென்னை, பிப். 26-
நன்றி தீக்கதிர் 27-02-11
கோட்டைக்கு நேரில் மனு கொடுக்க வந்த அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது இந்த அரசின் ஆணவப் போக்கை கட்டுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜனநாயகத்தில் எந்தத் தரப்பினரும் அரசின் முன் கோரிக்கைகளை வைத்து அதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வது இயற்கை. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கை களை அரசிடம் சொல்லா மல் வேறு எங்கு போய் சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே அவர்கள் கோரிக் கைகளை முன்வைத்து கடந்த 23ஆம் தேதி முதல் உண்ணா விரதப் போராட்டம் மேற் கொண்டுள்ள நிலையில் அவர்களை அரசு அழைத் துப் பேசி பிரச்சனையை தீர்ப்பதுதான் முறை . அதை யும் விட்டுவிட்டு அவர்கள் வேறு வழியின்றி கோட் டைக்கு நேரில் வந்து தி.மு.க. அரசை சந்தித்து மனு கொடுக்க வந்தபோது அவர் களை காவல்துறையின ரைக் கொண்டு கண்டபடி தாக்கியிருப்பது இந்த அர சின் ஆணவப் போக்கையே காட்டுகிறது. தி.மு.க. அர சின் இந்த அணுகுமுறையை வன்மையாகக் கண்டித் துள்ளார்.

படித்தவர்கள் தலைமை செயலகத்தை நோக்கி ஊர் வலமாக வந்தார்கள் என் றும், அவர்களை போலீ ஸார் தடுத்து நிறுத்தி அனுப் பினார்கள் என்றும் முதல மைச்சர் கலைஞர் பேசி யிருப்பது முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்ப தாகும். இது போதாதென்று மேலும் படித்தால் மட்டும் போதாது என்றும், பகுத்தறி வோடு சிந்திக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கலை ஞர் பேசியிருப்பது அவர் கள் போராட்டத்தை கொச் சைப்படுத்துவது மட்டு மல்ல, அவர்களது படிப் பையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இதிலிருந்து அவர் எத்தகைய ஏமாற்றுப் பேர் வழி என்பதும், வாய்ச்சவடால் காரர் என்பதும், சர்வாதி கார மனோபாவம் கொண் டவர் என்பதையும் நன்கு அறியலாம். இத்தகைய சர் வாதிகாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட் டும் வகையில் மக்கள் தகுந்த பாடத்தை இந்த ஆட்சி யாளர்களுக்கு வரும் தேர்த லில் புகட்டுவார்கள் என் பது உறுதி என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Saturday, February 26, 2011

ஆதரவு கரம் இதுதான்

திமுக அரசின் காட்டுமிராண்டித் தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு கண்டனம்
சென்னை, பிப். 25-
நன்றி தீக்கதிர் 26-02-11
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைவது, புதிய ஓய் வூதியத் திட்டத்தை கைவிடுவது, அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது, அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச் செல்வி தலைமையில் கடந்த இரண்டு தினங்களாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள னர். சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண் ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகி றார்கள். போராடும் ஊழியர்கள் சங்கங் களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண் பதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு காட்டு மிராண்டித்தனமாக தடியடித் தாக்கு தலை நடத்தியுள்ளது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டுள் ளனர். படுகாயமடைந்த நிலையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடத்திய தடியடித் தாக்குதலையும், ஜனநாயக விரோத அணுகுமுறையையும், காவல் துறையின் காட்டுமிராண்டித் தாக்குத லையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளின் நியாயத்தை கருத் தில் கொண்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்றும், காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்த னையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சிஐடியு

தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஜனநாயக ரீதியில் நடத்தும் போராட்டங் களை ஒடுக்குவதையே தமிழக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என சாடியுள்ள சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், அரசு ஊழி யர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல் துறை துணை ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அரசின் உண்மை முகம் இதுதான்

பாய்ந்தது இரும்புக் கரம்: அரசு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்
சென்னை, பிப்.25-
நன்றி தீக்கதிர் 2602-11

“இரும்புக்கரம் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கும்” மனநிலை திமுக அரசுக்கு மாறவில்லை என்பதன் வெளிப்பாடாக, வெள்ளியன்று ஊர்வல மாகச் சென்ற தலைவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையினர் அரஜாக கொடூரத் தாக்குதல் தொடுத்தனர். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தையொட்டி முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கைகளை எடுத்துரைக்க அவர்கள் புறப்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறை யினர் தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக் கானோர் படுகாயமடைந்தனர். அவர்களில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சேப்பாக்கத்தில் எழிலக வளா கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா. தமிழ்செல்வி தலை மையில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளியன்று 3வது நாளை எட்டியது.

இதேபோல், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினரும் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளா கிய வெள்ளியன்று அவர்கள் கறுப்புச் சட் டை, வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சங்கங்களின் தலைவர்களு டன் பேச்சு நடத்த அரசுத்தரப்பில் முன்வர வில்லை. இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரை சந்தித்து நேரில் தெரிவித்து பேச்சுவார்த் தை நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை உழைப்பாளர் சிலை அருகே காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து நிறுத்தினர். தடுப்பு வேலிகளைத் தாண்டி முன்னேறிச் சென்றவர்களை வாலாஜா சாலையில் காவல்துறையினர் மீண்டும் தடுத்தனர். இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் புதிய தலை மைச் செயலக வாயில் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர்.

தலைமைச்செயலகம் உள்ள இடத் திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக் கள், உண்ணாவிரதங்கள் கூட அனுமதிக் கப்படுவதில்லை என்ற நிலையில் இந்தத் துணிச்சலான முற்றுகைப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாதபோதும், காவல்துறை இணை ஆணையர் மு.சி. சாரங்கன் தடியடி நடத்த ஆணையிட, காவலர்கள் கண்மூடித்தன மாகத் தாக்கத்தொடங்கினர். இந்த தாக்கு தலில் பல ஊழியர்களின் காது பிய்ந்தது, வாயிலும் அடிபட்ட ரத்தம் கசிந்தது. சில ருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. காவல்துறையினரின் தாக்குதலால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சி யளித்தது. தாக்குதலைத் தொடர்ந்து காவல் துறையினர் நூற்றுக்கும்மேற்பட்ட ஊழியர் களையும் தலைவர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு தரதரவென்று இழுத்துச் சென்றனர். ஊழியர்கள் இந்தத் தாக்குதலுக்கும் அரசின் அணுகுமுறைக் கும் கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப் பிய வண்ணம் இருந்தனர்.

பின்னர் தலைவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த் தை நடத்தியதைத் தொடர்ந்து, கைது செய் யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட் டனர். ஊழியர்களும் சாலைப்பணியாளர் களும் தங்களது உண்ணாவிரதப் போராட் டத்தை உறுதியுடன் தொடர்ந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து, தலைவர்களை அதி காரிகள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

முதல்வருடன் பேச்சுவார்த்தை

முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை யில் அரசு ஊழியர் சங்கத்தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சீனிவாசன், இளங்கோ, அன்பரசு, ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் சாலைப்பணியாளர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைக் கப்பட்டது. நிதி நிர்வாக அதிகாரிகளுடன் உரிய ஆலோசனைகள் நடத்தி கோரிக் கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும், இதற் கான உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்ததாகவும் பேச்சுவார்த்தைக்குப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் மற்றும் சாலைப்பணியாளர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தை அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் இரா.முத்துசுந்தரம், பொருளாளர் க.ராஜ் குமார் ஆகியோர் முடித்து வைத்தனர்.

Thursday, February 3, 2011

கருவூல துறை ஊழியர்களின் பிரச்சனைகள்

வஞ்சிக்கப்படும் கருவூல கணக்குத்துறை அலுவலர்கள்

பா.அமாவாசை-
நன்றி தீக்கதிர் 29-01-11
தமிழ்நாடு கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த 20 ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங் கள், புதிய சூழலில் தற்போது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் கடந்த காலங்களில் வீரம் செறிந்த போராட் டங்களை நடத்தியுள்ளனர். பழிவாங்குதல் களையும் எதிர்கொண்டுள்ளனர். துயரங் களையும், இன்னல்களையும் ஏற்றுக் கொண்ட கருவூல ஊழியர்கள் மீண்டும் துடிப்புடன் உயர்ந்து நிற்கின்றனர். காலில் குத்திய நெறிஞ்சி முள்ளை பிடுங்கி எறிந்தால் விழும் இடத்தில் ஆயிரம் நெறிஞ்சி முள் உருவாகுவது போல பீனிக்ஸ் பறவை களாக தோன்றலாயினர். இனி கருவூலத் துறையில் சங்கம் என்பது இல்லை என்ற நிலைமை உருவாக்க அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டது.

1972ல் உள்ளீடு எனப்படும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. கையில் எழுதி வந்த உள்ளீடு 1990க்கு பிறகு கணினிமய மாக்கப்பட்டது. பணம் எடுக்கும் அலுவலர் கள் கொடுக்கும் வினாடியிலேயே அனைத் தையும் எடுத்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து இசிஎஸ் மூலம் பணம் பட்டுவாடா கொண்டு வரப்பட்டது. பட்டியல் கொடுத்த அன்றோ அல்லது மறு நாளோ பணம்பெற வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு வாரம் காலம் ஆனாலும் பணம் கிடைத்தப்பாடில்லை. ரிசர்வ் வங்கி பணம் பட்டுவாடாவிற்கு தேதியை நிர்ணயம் செய்கிறது. பணம் பட்டுவாடா செய்ய ஒரு வாரத்திற்கு மேலாகிறது. கருவூல ஊழியர் களுக்கு 17பி குற்றக் குறிப்பாணை வழங்கப் படுகிறது. அடுத்து எபிபிஎஸ் திட்டம் கரூரிலும், தேனியிலும் தோல்வி அடைந்த திட்டம். அடுத்த மாவட்டத்திற்கு அமல் படுத்தப்பட்டத்தை சங்கம் ஆட்சேபித்தது. அறிக்கை தயார் செய்து குறைகளை சுட்டிக் காட்டியது. இருப் பினும் மீண்டும் ஏட்டிபிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தர விட்டுள்ளது. இதை அடுத்த ஐடிஎம்எஸ் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு பச்சை கொடியை காட்ட வில்லை.

இ-பென்சன் என்ற பெயரில் நடை முறைக்கு ஒவ்வாத காலக்கெடு கொடுத்து ஆயஒவநச னுநவந செய்ய கெடுபிடி செய்கிறது. தற்போது கருவூலத்துறை புள்ளிவிவரம் தரும் துறையாக மாறி வருகிறது. கடந்த 10,15 ஆண்டு காலமாக காலிபணியிடங்கள் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரு கிறது. மூன்று பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து வருகின் றனர். நாளுக்கு நாள் வேலை பளு கூடி வரு கிறது. நடைமுறையில் காலதாமதம் ஏற்படு கிறது. 1997ல் 2 நாளில் பட்டியல்களை பாஸ் செய்ய வேண்டும் என நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. 1997க்கு பிறகு பில் பாஸ் செய் வதில், நடைமுறையில் ஏராளமான மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. இவை எதையும் கணக் கில் கொள்ளாமல் நீண்ட நாள் பணியிடங் களை காலியாக வைத்து இருப்பதும் ஒரு வகையாக ஆட்குறைப்பு நடவடிக்கையே என்பதை அரசும், நிர்வாகமும் உணர மறுக் கிறது. கணினியை குறித்த விஷயத்தில் நேர்ந்த சில துறை ஊழியர்கள் செய்யும் முறை கேடுகளுக்கு ஓய்வுபெறும் நாளில் கருவூலத் துறை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.

பிற துறையினர் மேலதிகாரிகளாக கருவூ லத்துறைக்கு வருவதால் தினமும் சந்திக்கும் பிரச் சனைகள் ஏராளம். பிரச்சனைகளை அன்றா டம் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற ஒரு அவலம் வேறு எந்த துறையிலும் இல்லை. இத்துறையில் இளநிலை பதவியானது, கூடு தல் இயக்குநர் வரை பதவி உயர்வு பெற வேண் டும். 2008ல் 777 கணக்கர் பணியிடங்கள் தேர்வு ஆணையமும் தேர்வு செய்யப்பட்டது. அதிலும் முழுமையாக நிவாரணம் இல்லை. மீண்டும் ஒருமுறை நேரடி கணக்கர் நியமனம் செய்யும் என எதிர்பார்த்தோம். 30.12..10 அறிக்கையில் கருவூலத்துறை இடம்பெற வில்லை. அதிலும் ஏமாற்றமே. 1.6.2009க்குள் சூடிவந ஐடீசூசூ வெளிவந்து, தேர்வு எழுதி, நிர்வாக காரணங்களால் 1.6.2009க்கு பிறகோ அல்லது முன்போ பணியில் சேர்ந்த இள நிலை ஊழியர் மற்றும் ஏஏஒ க்கு 1,86 படி ஊதியம் நிர்ணயம் செய்யலாம் என அரசாணை 340 சொல்கிறது. இந்த நியதி ஏன் நேரடி கணக்கர்களுக்கு பொருந்தாது? 2008ம் வருடத்தில் வெளிவந்த முந்தைய ஊதியம், கணக்கர் நிலையில் 4000 என குறிப் பிடப்பட்ட தொகை பணியில் சேர்ந்த பிறகு கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்க வில்லை எனில் அது சட்டத்திற்கு புறம் பானது. எனவே இத்துறையில் மிகவும் பாதிக் கப்பட்டது ஒரு பகுதி கணக்கர்கள்தான். புதியதாக பணியில் சேர்ந்தவர்கள் பணி வரன்முறை, தகுதிக்கான பருவம் முடித்தல், ஆணை வெளியிடுதல், மேல்முறைகள் குற்ற குறிப்பாணைகள் மீது தீர்வு காணுதல் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வெளியிடுதல் பணியில் இளையவர்கள் கூடுதல் ஊதியம் பெறும் மனு, ஆகியவை பல ஆண்டுகள் வரை நிலுவையில் இருப்பதும், 3 நாட்கள் பட்டி யல்கள் பாஸ் செய்யாத காரணத்திற்காக 17 பி குற்ற குறிப்பாணைகள் வழங்கப்படுவதையும் ஒப்பிட்டு பார்க்கும் ஊழியர்கள் உள்ளக் குமுறலோடு பணியாற்றி வருகின்றனர்.

இதன் பின்னணியில் சங்கத்தின் 7வது மாநில மாநாடு சென்னையில் 2011 ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அக்னி குஞ்சுகளாக புறப்பட்டு விட்ட கருவூல ஊழியர்கள் ஊழியர்கள் மக்கள் பிரச்சனை களுக்கும், தங்களுடைய பிரச்சனைகளுக் கும் தீர்வு காண்பது சர்வ நிச்சயமே.



(கட்டுரையாளர், சங்கத்தின் மாநில தலைவர்)

Tuesday, February 1, 2011

அச்சுறுத்தப்படும் அரசு ஊழியர்கள்
-இரா.தமிழ்ச்செல்வி -
நன்றி - தீக்கதிர் - 31-01-2011
செய்தித்தாள்களில் இந்த வாரம் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருப்பது மராட்டிய மாநிலத்தில் ஒரு கூடுதல் ஆட்சியர் சமூகவிரோதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள் ளார் என்பதே ஆகும். இந்த கொடு மையை கண்டித்து கவலையுடன் தமிழ கத்தில் சில செய்தித்தாள்கள் செய்தி வெளிட்டுள்ளன. நாடு முழுவதும் இத்த கைய கொடிய சம்பவங்கள் நடை பெறுவதும் அது குறித்து ஓரிரு நாட்கள் பரபரப்பாக செய்திகள் வருவதும், பின்னர் இச்சம்பவங்கள் குறித்த வழக்குகளின் கதி என்னவாயிற்று என்பதும் கூட அறியமுடியாத நிலைதான் உள்ளது..

இத்தகைய ஒரு சம்பவத்தில் தொட ரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சமீ பத்தில் அளித்த தீர்ப்பு விந்தையானது. 1999-ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த, ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்பவரும் அவரது இரு சின்னஞ் சிறு குழந்தைகளும் சில சமூக விரோதிகளால் எரித்து கொலை செய் யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங் என்பவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவன் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து கொண்டதன்பேரில் அவனு டைய தண்டனை ஆயுள் தண்டனை யாக மாற்றப்பட்டது. இதையும் எதிர்த்து அவன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். இந்த வழக்கில் ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், அவனுக்கு விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட மரண தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் என வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, பட்டப்பகலில் சின் னஞ்சிறு குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் எரித்துக்கொன்ற நிகழ்வு மரண தண்டனை வழங்கும் அளவிற்கு பெரிய குற்றம் ஒன்றுமில்லை என தீர்ப்பு வழங்கி, இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து இந்திய செய் தித்தாள்கள் எந்த அளவிற்கு முக் கியத்துவம் அளித்து செய்திகள் வெளி யிட்டன என்பது கேள்விக்குறியே!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகா லத்தில் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் தாக்கப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.

* விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் வெட்டப்பட்டதும்.

* சிவகாசியில் கள்ளத்தனமாக வெடி களை தயாரிக்கும் கிட்டங்கிகளை தணிக் கையிடச் சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்ததும், இறந்து ஊழியர்களின் குடும் பங்களுக்கு நாளதுவரை வாரிசுகளுக்கு வேலை மற்றும் உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண் டிருப்பதும்.

* முகவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரு பெண் அரசு ஊழியர் அதிகாரிகளால் மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் இரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொண் டதும்.

* குமரி மாவட்டத்தில் அமைச்சர் முன்னிலையிலேயே ஒரு துணை ஆட்சி யர் தாக்கப்பட்டதும், அதே மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற நெடுஞ்சா லைத்துறையினர் மீது வாகனத்தை ஓட்டி கொலை செய்ய முயற்சித்ததும்

* பெரம்பலூர் மாவட்டத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என ஒரு துணை ஆட்சியரை ஆளும் கட் சியின் சட்டமன்ற உறுப்பினர் தலைமை யில் சமூகவிரோதிகள் ஒன்று கூடி சிறைவைத்ததும்.

* திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறை களுக்கு மாறாக கலர் டி.வி.வழங்க வேண் டும் என்று சட்டமன்ற உறுப்பினரின் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்த வரு வாய் ஆய்வாளர் இழிவு படுத்தப்பட்டதும்.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட் டச் செயலாளரான ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவரை இழிவுபடுத்தி பேசியதும், அதன் விளை வாக அந்த வட்டாட்சியர் மனம் உடைந்து இறந்துபோனது குறித்தும், அதே மாவட் டத்தில் ஆளுங்கட்சியின் ஒன்றிய செய லாளர்கள் மணல் கடத்தலை தடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவரை மிரட்டியதும் இத்தகையச் சம்பவங்களில் அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் மீதுள்ள வழக்குகளில் காவல் துறை மெத்தனமாக நடந்துகொண்டிருப்பதும்.

* ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கிராம உதவியாளரை தாக்கியதும்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளரை அரசியல் பிரமு கர்கள் தாக்கியதும்

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கொலை செய் யப்பட்டதும்.

* நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் தாக்கப்பட்டு தனது காலை இழந்ததும்,

* கோவை மாவட்டத்தில் பொள்ளாச் சியில் தனது கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வில்லை என்பதற்காக அமைச்சர் ஒரு வர், வருவாய் ஆய்வாளரை தரக்குறை வாக பேசி, பின்னர் வருத்தம் தெரிவித்ததும்.

* திருவாரூர் மாவட்டத்தில் திருத் துறைப் பூண்டி உள்ளாட்சி அமைப்பு தேர் தலில் ஆளுங்கட்சி குறைந்த ஓட்டில் தோற்றுப்போவதை பொறுத்துக்கொள் ளாத அக்கட்சியின் பிரமுகர்கள், தேர்தல் அதிகாரியாக இருந்த மாவட்ட வருவாய் அலுவலரை முடிவுகளை அறிவிக்க விடா மல் குளியலறையில் சிறை வைத்ததும்

* மணல் கடத்தலை தடுத்த குட வாசல் வட்டாட்சியர் அலுவலகம் தாக் கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதும், அது குறித்த வழக்கு மூன்று ஆண்டுகளாகியும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும்,

இவ்வாறு அடுக்கடுக்காக, அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தாக்கப் படுகின்றனர். இவைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் மாவட் டங்களில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி யும் வேலை நிறுத்தங்கள் செய்தும் போராடி வருகிறது. காவல் துறையே இத்தகையச் சம்பவங்களில் உரிய பிரிவுகளில் வழக்கு களை பதிவு செய்யாமல் ஆட்சியாளர் களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் குறித்து தமிழக நாளேடுகள் எந்த அளவிற்கு செய்திகள் வெளியிட்டன என்பது கேள்விக் குறியே! இவ்வளவு ஏன்? மதுரையில் தினகரன் நாளேடு அலுவலகம் தாக்கப்பட்டு, அங்கு பணி யாற்றிக் கொண்டிருந்த மூவர் கொலை செய்யப்பட்டதும், அந்த வழக் கின் கதி என்னவாயிற்று என்பதும் அந்த ஆண் டவனுக்கே வெளிச்சம்!

இத்தகையச் சம்பவங்களில் ஈடு படும் சமூகவிரோதிகள், ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களின் ஆதரவை பெற்று செயல்படுவதுதான் வருத்தத்திற் குரிய விஷயமாகும்.

ஆட்சியாளர்கள் குறித்தும் அரசியல் வாதிகள் குறித்தும் சுதந்திரமாக கருத்துக் களை வெளியிடும் பத்திரிகை அலுவல கங்கள் தாக்கப்படுவதும், எரிய+ட்டப்படு வதும் தமிழ்நாட்டில் சர்வசாதாரண நிகழ் வாக மாறிவிட்ட நிலையில், மராட்டிய மாநிலத்தில் அரசுஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தையாவது பொறுப்புணர்வுடன் வெளியிட்ட செய்தித்தாள்களை பாராட் டாமல் இருக்கமுடியாது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் அதை பல முறை வெளியிட்டு மிகைப்படுத்தும் செய்தித்தாள்கள், அரசுஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும்போதும், அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படும் போதும் அதை மக்கள் மத்தியில் அவ் வளவாக கொண்டு செல்ல முன்வருவ தில்லை என்பதையும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. இதே நேரத்தில் அரசின் விளம்பரங்களை எதிர் பார்த்து தயங்கிக்கொண்டிருக்காமல் உழைப்பாளி மக்களின் இயக்கச் செய்தி களை உரிமைப் போராட்டங்களை வெளி யிடும் ஓரிரு பத்திரிகைகளும் இருக் கின்றன என்பதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக் கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எத்தனை நாளுக்குத்தான் இந்த பொதுஜ னம் பார்த்துக் கொண்டு ஊமைத்துரை களாக சும்மா இருப்பார்கள்? அவர்களது அறிவுக் கண்ணும் திறக்கும்! பத்திரிகை சுதந்திரத்திற்கும் வழி பிறக்கும்!

- கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்

Monday, January 10, 2011

10-02-11 ஒரு நாள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் (10-02-2011) வேலை நிறுத்தம்
அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலபிரதிநிதித்வப் பேரவையில் முடிவு

- அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
- ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும்
- மத்திய அரசு வழங்கியது போல் போக்குவரத்துப் படி மற்றும் வீட்டு வாடகைப்படி போனஸ் ஆகியவை வழங்க வேண்டும்
- புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டம் அமல்படுத்திட வேண்டும்
- தனியார் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்திட வேண்டும்
-தொழில் நுட்ப பணியாளர்களுக்கு மத்திய அரசிக்கினையான ஊதியம் வழங்கவேண்டும்
- பணி நீக்கம் செய்யப்பட சத்துணவு சங்கத்தின் தலைவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்
-சத்துணவு அங்கன்வாடி மக்கள் நலப்பணியாளர்கள். ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட ஊதியம் வழங்கவேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிருவாகிகளுடன் முதல்வர் முன்னிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்திற்கு முதல்வர் அறிவித்தப்படி அங்கிகாரம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10-2-11 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பிர் வெற்றிபெறச் செய்வீர்
இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்

தமிழக அரசு காலிப்பணியிடங்களை உண்மையில் நிரப்புகிறதா ?

வேலைவாய்ப்பு: சொன்னதும் செய்ததும்
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 3-01-11
தமிழக முதல்வர், சமீபத்தில், வேலை வாய்ப்பு அன்றும் இன்றும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 40 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட் டுள்ளார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பகத் தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த அறிக்கையை கண்டு ஏமாற்றம் அடைந்துள் ளனர். மக்களை திசை திருப்ப இந்த அறிக் கை வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் இத னால் வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

மறைமுகமான பணி நியமனத் தடை ஆணை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறை களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்கு றுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன், காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக மறைமுகமான ஒரு தடை ஆணையை பிறப் பித்தது. (ஆணை எண். 91. ப.ம.நி.சீ.து.நாள் 6-07-2006) இந்த ஆணையை கண்டவுடன் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆணையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் பணி நியமனத் தடை ஆணை 212 ப.ம.நி.சீ. தி.து. நாள் 29.11.2001 விலக்கிக்கொள்ளப்பட்டு, அரசு ஆணை, 14 ப.ம.நி.சீ.தி.து நாள் 21.02. 2006ல் வெளியிடப்பட்டது. இந்த ஆணை, பணி நியமனத் தடை ஆணைக்கு முன் இருந்த நிலையில் காலிப்பணியிடங்களை துறைத்தலைவர்கள் நிரப்பிட அதிகாரம் அளித்தது. ஆனால் அரசு ஆணை எண். 91ல் ஸ்டாப் கமிட்டியின் முன் அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்டாப் கமிட்டி, துறைத் தலைவர்களின் பரிந்துரையை பரிசீலனை செய்து காலிப்பணியிடங்களில் ஒரு குறிப் பிட்ட விழுக்காட்டை கலைத்து ஆணை யிட்டு வருகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் வேளாண்மைத்துறை, தொழிலாளர் நலத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான பணி யிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அரசு இதை மறுக்க முடியுமா? தற்போதும் அரசு ஆணை 123ல் பணியிடங்களை நிரப்பிட துறைத் தலைவர்களின் அதிகார வரம்பை சுருக்கி ஆணையிடப்பட்டுள்ளது உண்மை யல்லவா?

காலிப்பணியிடங்கள்

இன்றும் பொது சுகாதாரத்துறையில் சுகா தார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் 5000க்கும் மேற் பட்டவை காலியாகவுள்ளன. வருவாய்த்துறை யில் மக்களின் அன்றாடப் பணிகளை மேற் கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் 3000க்கும் மேலாக காலியாக உள் ளன. இதே துறையில் உதவியாளர் நிலையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் மற் றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியா ளர் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. துணை முதல்வரின் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர் நிலையில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஊராட்சி ஒன்றி யங்களில் அரசுப் பணிகள் தேக்கமடைந்துள் ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வரு வாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையி லேயே பணியிடங்கள் காலியாக வைக்கப்பட் டுள்ளன என்றால், ஏனைய துறைகளில் கேட்கவே வேண்டாம். அரசிற்கு பெரும்பான் மையான வருவாயை ஈட்டித்தரும் வணிக வரித்துறையில் 3000க்கும் மேற்பட்ட பணி யிடங்கள் அனைத்து நிலைகளிலும் காலி யாகவுள்ளன. தொழிலாளர் நலத்துறையில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. நீதித்துறையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வேலைவாய்ப்பகத்தில் சரிபாதி பணியிடங் கள் காலியாகவுள்ளதால் வேலைவாய்ப்பிற் காக பதிவு செய்யவரும் இளைஞர்களும் நிவா ரணம் பெறவரும் இளைஞர்களும் நாள் கணக் கில் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளி லும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளன. இவ்வளவு ஏன்? கோட் டையில் உள்ளஅரசின் தலைமைச் செயல கத்தில் 30 சதவீதத்திற்கும் மேலான பணி யிடங்கள் காலியாகவுள்ளன. அரசுப்பணியா ளர்களை நியமனம் செய்யும் பணியில் ஈடு பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்திலும் 30 சதவீதத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாகவுள்ளன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது என்பது முதல்வருக்கு தெரியாதா?

நிரப்பப்பட்ட பணியிடங்கள்

முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ள இலட்சக்கணக்கான பணியிடங் களில் முறையான ஊதியத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரம்தான்! மற்றவை தொகுப்பூதி யம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என விதவிதமாக ஊதியம் நிர்ணயம் செய்து உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கப்பட் டுள்ளது என்பதுதான் உண்மை.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றிவரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்களுக்கு சொற்பத் தொகையை உயர்த்தி, ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத் தையே மூன்றாக பிரித்து அதற்கு சிறப்பு கால முறை ஊதியம் என பெயரிட்டு இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தைப் போல் கணக்கு காட்டி ஏமாற்ற முயற்சி நடைபெற்றுள்ளது. ஏமாறப்போவது மக்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், வருவாய்த்துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் 2500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணையிடப்பட் டது. அதன் தொடர் நடவடிக்கையே இந்த ஆட்சியில் தேர்வு நடத்தப்பட்டு, கிராம நிர் வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட னர். இதற்கு பிறகு இன்று 3000க்கும் மேற் பட்ட பணியிடங்களை நிரப்பிட அரசு ஆற அமர நடவடிக்கை எடுத்து, தேர்வாணையத் தால் தேர்வு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி தேர்வு நடைபெற்று பணி நியமனம் செய்வதற் குள் இன்னும் 3000 பணியிடங்கள் காலியாகி விடும். ஆக எப்பொழுதும் 3000 பணியிடங் கள் காலியாக வைத்திருப்பதே அரசின் நோக் கமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் தொகுப்பூதிய அடிப் படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள், முறையான ஊதி யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பணிநியமனத்தின்போதே அன் றைய அரசு முதலில் 5 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்படுவார் கள் என்றும், பின்னர் 3 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படு வார்கள் என்றும் ஆணை பிறப்பித்திருந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர் போலும்.

கடந்த 20 ஆண்டுகளாக எரிசக்தித்துறை யில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் ரூ.400 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று சிஐடியு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந் தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றது மட்டுமல்லாமல், அரசிற்கு ஆதர வான சங்கங்களை வைத்து ஒப்பந்த ஊழியர் கள் படிப்படியாக மஸ்தூர்களாக ஹெல்பர்க ளாக நியமனம் செய்யப்படுவார்கள் என உடன்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அரசு, அதை தனது சாதனை யாக வெளிப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

வேலைச் சந்தைகள்

வேலைச்சந்தைகள் மூலமாக இலட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங் கப்பட்டது போலும், இன்னும் சில ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது. மாவட்டங்களில் நடைபெற்ற வேலைச் சந்தைகளில் பங்கேற்று ஏமாற்றம டைந்துள்ள இலட்சக்கணக்கான இளைஞர் கள் முதல்வரின் அறிக்கையை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். எந்தெந்த நிறுவனங் களில் எத்தனை ஆயிரம் பணியிடங்கள் நிரப் பப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருகின்ற வேளையில், பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியிழந்து வருகின்ற நிலையில், முதல்வரின்அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந் துள்ளது. தொண்டறம் பேணும் அமைப்புகளு டன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மேற் கொண்ட முயற்சிக்கு அறிக்கையில் சுட்டிக் காட்டும் அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரும் என்றால், அரசின் வேலைவாய்ப்புத் துறையே ஏன் அந்தப் பணியினை தொண்டறம் பேணும் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தக்கூடாது? அதற்கேற்றவாறு அரசு சட்டம் இயற்ற முன்வருமா? இடஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள் போன்ற சிறப்பு ஒதுக் கீடு இத்தகைய வேலைச்சந்தைகளில் கிடைக்க அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கிட முன் வர வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளா தாரப் பின்னடைவு இன்று வேலையின்மை யை அதிகரித்துவிட்டது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ள நிலை யில், வெறும் புள்ளி விபரங்கள் பயன் அளிக் காது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பினை உரு வாக்கிட அரசு முன்வரவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.