செப்.7 அகில இந்திய வேலைநிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய - மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்
புதுதில்லி, ஜூலை 15-
மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனை வருக்குமான பொது விநியோக முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும் என , புதுதில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாடு பிரகடனம் செய்தது.
சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய - மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகிய வற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவ்லங்கார் அரங் கில் நடைபெற்றது. சிஐடியு தலை வர் ஏ. கே. பத்மநாபன் உட்பட பல் வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமையேற்று மாநாட்டை வழி நடத்தினர். மாநாட்டில் சிஐடியு துணைத் தலைவர் டாக்டர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செய லாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற் சங்கங் களின் தலைவர்கள் உரையாற் றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:
அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
உலகப் பொருளதார நெருக்கடி யின் விளைவாக, தொழில் முனை வோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப் புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர் களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் உறுதியாக அமல்படுத்த வேண் டும், அதனை மீறுவோர் மீது தண் டனை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 -முறைசாராத் தொழி லாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட் டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,
லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. மேற்கண்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து கடந்த 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண் டமான முதல் சிறப்பு மாநாடு நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போராட்டம் என சக்தி மிக்க போராட்டங்கள் நடந்தன.
விலைவாசியைக் குறைக்கக் கோரி, குறிப்பாக உணவுப் பொருள் களின் விலைகளைக் குறைக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்க ளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தொழிலாளர் களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங் கிக் கொள்வது அதிகரித்து வரு கிறது.
லாபமீட்டும் பொதுத்துறை நிறுவ னங்களைத் தாரை வார்க்கும் முயற் சிகளும் தொடர்கின்றன. உதா ரணமாக அரசு, இந்திய நிலக்கரி கழகம், பிஎஸ்என்எல், செயில், என் எல்சி, இந்துஸ்தான் காப்பர், என் எம்டிசி முதலானவற்றைக் குறிப் பிடலாம்.
தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதி லும், அரசு, பெட்ரோலியப் பொருட் களின் விலையை உயர்த்தியிருப் பதுடன் அதன் மீதிருந்த கட்டுப் பாட்டையும் நீக்கிவிட்டது.
எனவே, அனைத்துத் தொழிற் சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக் கிறது.
நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய - மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெ ரும் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கி றது. அரசு அதன்பின்னும் கோரிக் கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி சக்திமிக்க பேரணி நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர், அ.இ.மா.அ.ஊ.சம்மே ளனம்) மற்றும் ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உள்ளிட்ட சிஐடியு-வின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப் பினர்களும் கலந்து கொண்டனர்.
Thursday, July 22, 2010
Monday, July 19, 2010
போராட்டங்களை தூண்டுவது யார்
போராட்டங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா?
-
போராட்டங்களை திசை திருப்பாமலும், உள்நோக்கம் கற்பிக்காமலும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சத்துணவு ஊழியர்கள் அனைவரை யும் முழு நேர அரசு ஊழியராக்கி, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை உடன் நிறை வேற்றிட அரசை வலியுறுத்தி கடந்த ஜூலை9 ம்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் 11.7.2010ல் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களை போல் சத்து ணவு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர் சங்கங்கள் இணைந்து 21.11. 2009ல் நன்றி விழா நடத்தினர் என்றும், அந்த மாநாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்கள் மகிழ்ச்சியாக சென் றார்கள். ஆனால் ஒரு கட்சியின் சார்பு டைய சிலர் மட்டும் அரசை எதிர்த்து இது போன்ற கிளர்ச்சிகளை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்றும், இந்தப் போராட் டம் உள்நோக்கத்தோடும், கட்சி கண் ணோட்டத்துடனும் நடத்தப்படும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.சத்துணவுத் திட்டம் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு ஊழியரின் பணிக ளும், பொறுப்புகளும் அதிகரித்து, இன் றைய நிலையில் முழு நேர பணியாகவே மாறியுள்ளது. ஆனால், அரசோ பகுதி நேர ஊழியர் என்று கூறி ஊதியக் குழுவால் வரையறுக்கப்படாத ஊதியமாக சிறப்பு காலமுறை ஊதிய விகிதம் என்றும், சிறப்பு மாதாந்திர ஊதியம் என்றும் கடுமையான விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாத மிகவும் குறைந்த ஊதியம் மற் றும் ஓய்வூதியத்தினை வழங்கி வருகிறது. இதில் ஊழியர்கள் தங்களுடைய அன் றாட தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், வாழ்வில் பல்வேறு சமூக ரீதியான மற்றும் உறவு முறை ரீதியான கடமைகளை எதிர் கொள்ள முடியாமல் பொருளாதார நிலை மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடம் வறுமையின் பிடியில் உழலும் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட கோருகிறோம்.அரசுத்துறை காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று 2007 ஜனவரியில் அன்றைய சமூக நலம் மற் றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு தேறிய சத்துணவு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் இவர்களுக்கு இளநிலை உதவி யாளர்களாக பதவி வழங்கினால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்ற புள்ளி விபரங்களை மாவட்டங்களிலி ருந்து சமூக நலத்துறை ஆணையர் அவர் களால் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் இதுநாள் வரை எந்த வொரு ஊழியருக்கும் பதவி உயர்வு வழங் கப்படவில்லை.மேலும் 21.11.2009ல் முதலமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து 2010 ஜனவரி 12ல் சமூக நலத்துறையில் மட்டும் பதவி உயர்வு வழங்கும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர் களிடம் பணி உயர்வுக்கான விருப்பம் மற்றும் விருப்பமின்மை கடிதங்கள் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட் டுள்ளது. ஆனால், உண்மையில் பதவி உயர்வு வழங்குவதற்கான காலிப் பணி யிடங்கள் தற்போது சமூக நலத்துறையில் இல்லை என்பதுதான் தகவல்.சத்துணவு ஊழியர்களின் போராட்ட காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வழங்கி ஊழியர்களை ஏமாற்றுவதை விடுத்து, இன்றைய நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்க ளின் கல்வித் தகுதி அடிப்படையில் அக்காலிப்பணியிடங்களில் பணி வழங்கி பதவி உயர்வு வழங்கிட கோருகிறோம்.மேலும் சத்துணவை தயாரித்து வழங்க செலவினத் தொகையாக ஒரு மாணவருக்கு உணவு ஒன்றுக்கு 44 பைசா 18.7.2009 முதல் அனுமதித்து வழங்கப்படுகிறது. உதாரணமாக 100 மாணவர்களுக்கு காய்கறிக்காக ரூபாய் 20ம், சாம்பார் தயாரிக்கும் மளிகை பொரு ளுக்காக (மசாலா) ரூ.9ம், பத்து கிலோ அரிசியை வேக வைக்கவும், அதற்குரிய சாம்பார் தயாரிக்கவும் மற்றும் 100 முட் டைகளை வேகவைக்கவும், எரிபொருள் விறகுக்காக ரூ.15 மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இன்றுள்ள கடுமையான விலை வாசி உயர்வில் அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால் ஊழியரின் ஊதியத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவிட வேண்டியநிலை உள்ளது.குறிப்பாக, ஜூன் 2000-இல் மளி கைக்காக ஒரு உணவிற்கு அனுமதிக்கப் பட்ட நாலரை பைசா என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் டிசம்பர் 2002ல் ஒன்பது பைசாவாக உயர்த்தப் பட்டது. ஆனால், 2002க்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி பல மடங்கு கடுமையாக உயர்ந்தபிறகும் இதற்கான செலவின தொகையை அரசு உயர்த்தி தரவில்லை. மேலும் 2007க்குப் பிறகு அனைத்து பொருட்களின் விலை யும் பல மடங்கு உயர்ந்த நிலையில், வழங் கப்படும் உணவு மேலும் தரமுள்ளதாக அமைய உணவு ஒன்றுக்கு தயாரிப்பு செல வின தொகையினை ரூ.2 ஆக உயர்த்தி வழங்கிட கோருகிறோம்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் என்பது ஒட்டுமொத்த ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்காகவும் பொருளாதார முன் னேற்றத்திற்காகவும் பாடுபட கூடியதும், ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட் டையும் உருவாக்கும் நோக்கங்களையும் குறிக்கோளையும் கொண்ட அமைப்பு. எந்தவொரு கட்சியின் சார்பாகவும் செயல் படுவது அல்ல. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அரசை வலி யுறுத்தி நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை, அரசை எதிர்த்து நடத்தப்படும் கிளர்ச்சி என்று கூறுவதும், போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிக் கப்படுவதும், கட்சி கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் போராட்டம் என்று கூறி, போராடும் ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூசி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியும் பிரச்சனைக்கு தீர்வாகாது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, போராடும் ஊழியர்களின் சங்கத் தலைமையை அழைத்துப் பேசி பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
-
போராட்டங்களை திசை திருப்பாமலும், உள்நோக்கம் கற்பிக்காமலும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சத்துணவு ஊழியர்கள் அனைவரை யும் முழு நேர அரசு ஊழியராக்கி, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை உடன் நிறை வேற்றிட அரசை வலியுறுத்தி கடந்த ஜூலை9 ம்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் 11.7.2010ல் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களை போல் சத்து ணவு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர் சங்கங்கள் இணைந்து 21.11. 2009ல் நன்றி விழா நடத்தினர் என்றும், அந்த மாநாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்கள் மகிழ்ச்சியாக சென் றார்கள். ஆனால் ஒரு கட்சியின் சார்பு டைய சிலர் மட்டும் அரசை எதிர்த்து இது போன்ற கிளர்ச்சிகளை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்றும், இந்தப் போராட் டம் உள்நோக்கத்தோடும், கட்சி கண் ணோட்டத்துடனும் நடத்தப்படும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.சத்துணவுத் திட்டம் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு ஊழியரின் பணிக ளும், பொறுப்புகளும் அதிகரித்து, இன் றைய நிலையில் முழு நேர பணியாகவே மாறியுள்ளது. ஆனால், அரசோ பகுதி நேர ஊழியர் என்று கூறி ஊதியக் குழுவால் வரையறுக்கப்படாத ஊதியமாக சிறப்பு காலமுறை ஊதிய விகிதம் என்றும், சிறப்பு மாதாந்திர ஊதியம் என்றும் கடுமையான விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாத மிகவும் குறைந்த ஊதியம் மற் றும் ஓய்வூதியத்தினை வழங்கி வருகிறது. இதில் ஊழியர்கள் தங்களுடைய அன் றாட தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், வாழ்வில் பல்வேறு சமூக ரீதியான மற்றும் உறவு முறை ரீதியான கடமைகளை எதிர் கொள்ள முடியாமல் பொருளாதார நிலை மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடம் வறுமையின் பிடியில் உழலும் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட கோருகிறோம்.அரசுத்துறை காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று 2007 ஜனவரியில் அன்றைய சமூக நலம் மற் றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு தேறிய சத்துணவு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் இவர்களுக்கு இளநிலை உதவி யாளர்களாக பதவி வழங்கினால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்ற புள்ளி விபரங்களை மாவட்டங்களிலி ருந்து சமூக நலத்துறை ஆணையர் அவர் களால் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் இதுநாள் வரை எந்த வொரு ஊழியருக்கும் பதவி உயர்வு வழங் கப்படவில்லை.மேலும் 21.11.2009ல் முதலமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து 2010 ஜனவரி 12ல் சமூக நலத்துறையில் மட்டும் பதவி உயர்வு வழங்கும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர் களிடம் பணி உயர்வுக்கான விருப்பம் மற்றும் விருப்பமின்மை கடிதங்கள் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட் டுள்ளது. ஆனால், உண்மையில் பதவி உயர்வு வழங்குவதற்கான காலிப் பணி யிடங்கள் தற்போது சமூக நலத்துறையில் இல்லை என்பதுதான் தகவல்.சத்துணவு ஊழியர்களின் போராட்ட காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வழங்கி ஊழியர்களை ஏமாற்றுவதை விடுத்து, இன்றைய நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்க ளின் கல்வித் தகுதி அடிப்படையில் அக்காலிப்பணியிடங்களில் பணி வழங்கி பதவி உயர்வு வழங்கிட கோருகிறோம்.மேலும் சத்துணவை தயாரித்து வழங்க செலவினத் தொகையாக ஒரு மாணவருக்கு உணவு ஒன்றுக்கு 44 பைசா 18.7.2009 முதல் அனுமதித்து வழங்கப்படுகிறது. உதாரணமாக 100 மாணவர்களுக்கு காய்கறிக்காக ரூபாய் 20ம், சாம்பார் தயாரிக்கும் மளிகை பொரு ளுக்காக (மசாலா) ரூ.9ம், பத்து கிலோ அரிசியை வேக வைக்கவும், அதற்குரிய சாம்பார் தயாரிக்கவும் மற்றும் 100 முட் டைகளை வேகவைக்கவும், எரிபொருள் விறகுக்காக ரூ.15 மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இன்றுள்ள கடுமையான விலை வாசி உயர்வில் அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால் ஊழியரின் ஊதியத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவிட வேண்டியநிலை உள்ளது.குறிப்பாக, ஜூன் 2000-இல் மளி கைக்காக ஒரு உணவிற்கு அனுமதிக்கப் பட்ட நாலரை பைசா என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் டிசம்பர் 2002ல் ஒன்பது பைசாவாக உயர்த்தப் பட்டது. ஆனால், 2002க்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி பல மடங்கு கடுமையாக உயர்ந்தபிறகும் இதற்கான செலவின தொகையை அரசு உயர்த்தி தரவில்லை. மேலும் 2007க்குப் பிறகு அனைத்து பொருட்களின் விலை யும் பல மடங்கு உயர்ந்த நிலையில், வழங் கப்படும் உணவு மேலும் தரமுள்ளதாக அமைய உணவு ஒன்றுக்கு தயாரிப்பு செல வின தொகையினை ரூ.2 ஆக உயர்த்தி வழங்கிட கோருகிறோம்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் என்பது ஒட்டுமொத்த ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்காகவும் பொருளாதார முன் னேற்றத்திற்காகவும் பாடுபட கூடியதும், ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட் டையும் உருவாக்கும் நோக்கங்களையும் குறிக்கோளையும் கொண்ட அமைப்பு. எந்தவொரு கட்சியின் சார்பாகவும் செயல் படுவது அல்ல. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அரசை வலி யுறுத்தி நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை, அரசை எதிர்த்து நடத்தப்படும் கிளர்ச்சி என்று கூறுவதும், போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிக் கப்படுவதும், கட்சி கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் போராட்டம் என்று கூறி, போராடும் ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூசி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியும் பிரச்சனைக்கு தீர்வாகாது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, போராடும் ஊழியர்களின் சங்கத் தலைமையை அழைத்துப் பேசி பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Friday, July 2, 2010
விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் சாத்தியமான இடங்களில் இரண்டாம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அரசுஊழியர் சங்கத்தின் மாநில மையம் அறைகூவல் !
மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூபாய் 3.50 டீசல் விலையை ரூபாய் 2 கியாஸ் விலை ரூபாய் 35 என உயர்த்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் பெட்ரோலிய பொருட்களின் விலையை இனி பெட்ரோலிய நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் . எனவே இந்த விலை உயர்வை கண்டித்து வரும் சூலை 2 அல்லது 5 தேதிகளில் சாத்தியமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட அரசுஊழியர் சங்கத்தின் மாநில மையம் அறைகூவல் விடுத்துள்ளது.
இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?
விலை உயர்வும்! விளம்பரம் சொல்லும் உண்மையும்!
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 30-06-10
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.
பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 30-06-10
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.
பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .
இந்திய நாட்டின் ஜனத்தொகையில் 50 விழுக்காடு மக்களுக்கு ஆண்டொன்றிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குவதை சுமையாக விளம்பரப்படுத்தியுள்ள மத்திய அரசு, சென்ற ஆண்டு ஒரே ஒரு நபருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இதே அளவு தொகையை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அம்பானி குடும்பத்தினரை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களை சுமையாக கருதுவது ஏன்?மத்திய அரசு, சுட்டிக்காட்டியுள்ள நாடுகளின் எண்ணெய் சந்தையுடன் இந்திய நாட்டு எண்ணெய் சந்தையை ஒப்பிட்டு நோக்கினால், அந்நாடுகளின் ஒட்டுமொத்த சந்தையை காட்டிலும் இந்திய எண்ணெய் சந்தை மிகப்பெரியது. மேலும் இந்த நான்கு நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனைகளால் ஒரு நிலையற்றத்தன்மை நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாடுகளுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க மத்திய அரசு முனைவது விந்தையானது.
கூட்டணிக் கட்சிகளின் கடமை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு முடிவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முடிவாக இருந்தாலும் அவைகளை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரிப்பதும், இந்த முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், மத்திய அரசிற்கு முடிவினை மறுபரிசீலனை செய்ய கடிதம் எழுதுவதும் விந்தையானது. இக்கட்சிகள் மேற்கொண்டு வரும் இரட்டை நிலைபாட்டினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது உடனடி வேலையாகும். தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலில் ஒப்புதல் தந்துள்ளனர். தமிழக முதல்வரோ பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பற்றி குறிப்பிடுகையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், உத்தேசித்திருந்த விலை உயர்வைவிட ஓரளவு குறைத்தே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விலை ஏற்றத்தில் ஒரு ஆதாயமும் உண்டு. எரிபொருள்களின் மீது மாநில அரசுகள் விதித்துவரும் வரி வருமானம் உயரவும் செய்வதால், இந்த கட்சிகள் எரிபொருள்களின் விலை ஏறும்போது கண்டும் காணாமல் இருக்கின்றன. கடந்த முறை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் தடுத்துவந்தனர் என்பதை மக்கள் அறிவர். ஆனால் இன்றோ பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த இனி அமைச்சரவைக் குழுக் கூட கூட வேண்டியதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களே விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.
Tuesday, June 29, 2010
போபால் மறுக்கப்பட்ட நீதி
குற்றத்துக்குரிய தண்டனையில்லை
-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
போபால் விஷவாயு வழக்கு முடிந்து, எட்டு அதிகாரிகளுக்கு மட்டும் தலா இரண்டு வருடங் கள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.26 வருடங்களுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக் கசிவு கோரவிபத்தில் 25 ஆயி ரம் பேர் பலியாயினர். இன்றும் கூட, அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு நோய் களுக்கு இரையாகி வருகின் றனர். மேலும் அங்கே 350 டன் எடையுள்ள ரசாயனக் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விட்டது. குற்றத்தின் பரிமாணம் மிகமிகப் பயங்கரமானது ஆகும். ஆனால் தண்டனையோ மிக மிக லேசானதாகிப் போயிற்று. இன்றும் மேற்படி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மேலா ளரான வாரன் ஆண்டர்சன் தனது தாய்நாடான அமெரிக்கா வில் சர்வ சுதந்திரத்துடன் உலவி வருகிறார். அவர் போபால் சம்பவம் நடந்த ஒருசில மணித் துளிகளிலேயே இந்திய நாட் டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை அவ்வாறு தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? மாநில நிர் வாகிகளா, மத்திய அமைச்சர் களா என்றெல்லாம் தற்போது பட்டிமன்றம் நடந்து வருகிறது. நீதிமன்ற வளாகத்தில் எவருமே வாரன் ஆண்டர்சன் பற்றிப் பேசவேயில்லை. சர்வதேச சட்டங்களை மதிக்காத அமெரிக்கா அமெரிக்க அரசைப் பொறுத்தமட்டில் அது எந்த ஒரு சர்வதேச சட்டத்தையும் மதிப் பதே கிடையாது. அதேபோன்று உலக அரங்கில் பகாசுர பன் னாட்டு நிறுவனங்கள் புரிகின்ற குற்றச்செயல்கள் யாவும் மிக மிக அலட்சியப்படுத்தப்படுகின்றன.இந்திய மக்களைப் பொறுத்த வரை நம் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது. போபாலில் நடந்தது மிகப்பெரிய தோர் வரலாற்றுக் கொடுமை யாகும். அந்தச் சம்பவத்தைப் பற்றி அமெரிக்கர்கள் மிகவும் துச்சமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இந்தியாவைத் தங் களுடைய காலனி நாடாகக் கருதி இறுமாப்புடன் நடந்து வருகிறார்கள். நீண்ட நெடிய தாமதம்போபால் சம்பவமானது 1984ம் வருடம் நடைபெற்றது. இந்திய நீதித்துறையானது அது பற்றி விசாரித்துத் தீர்ப்பளிப்ப தற்கு 26 வருடங்கள் தேவைப் பட்டன. இது வெட்கப்படவேண் டியதோர் சங்கதியாகும். விஷவாயுக் கசிவினால் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேற்படி தொழிற்சாலை அதி காரிகள் எட்டுப்பேர்களுக்கு வெறும் 2 வருடத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் சாலையின் பிரதம நிர்வாகியைத் தப்பவிட்டுவிட்டார்களே! மேற்படி நிர்வாகிக்குத் தெரியா மல் அத்தகைய விபத்து ஏற்பட் டிருக்கவே முடியாது. தலைமை நிர்வாகி என்ற வகையில் அவர் தான் நடந்த வெங்கொடுமைக் குப் பொறுப்பேற்றிட வேண்டும்.நிர்வாகமே பொறுப்புகார்பைடு தொழிற்சாலை நிர்வாகமும், அதனுடைய தலை வராயிருந்த வாரன் ஆண்டர் சனும் நடந்தவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் அவரை எந்த ஒரு நீதிமன்றமும், விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்திய அரசாங்கமானது ஆண்டர் சனை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரு வதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேற்படி பிரச் சனையில் இந்தியப் பிரஜைகளு டைய உயிர்கள் அவ்வளவு மலி வானவையாகக் கருதப்படுவது ஏன்? ஆண்டர்சன் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 304வது பிரிவின்படி தண்டிக்கப்பட வேண்டியதோர் குற்றவாளியா வார். ஆனால் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுநாள் வரை பதிவு செய்யப்படவில் லை. ஆண்டர்சனைப் போன்ற பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய குற்றங்களுக்கு தண் டனை கிடையாதா? அப்படியா னால் நம்முடைய குற்றவியல் சட்டங்கள் யாவும் வெறும் கேலிப்பொருட்கள்தானா? விபத்துகள் பற்றிகதிர்வீச்சுகள், எரிவாயுக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் பல் வேறு விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக எண்ணிலடங்கா மனித உயிர் கள் பலியாகின்றன. அதைத் தடுத்திடுவதற்கு எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை! இது மிகவும் பரிதாபத்துக்குரியதோர் அம்சமாகும்.1984ம் வருடம் போபாலில் அத்தகையதோர் பேரழிவுதான் நடந்தேறியது. விஷவாயுக் கசிவி னால் 25 ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர். யூனியன் கார்பைடு நிர் வாகத்தையும், ஆண்டர்சனை யும் கூண்டிலேற்றியே தீரவேண் டும் என்று சகல இடதுசாரி களும் பொதுமக்களும் திரண் டெழுந்து மத்திய அரசை நிர்ப் பந்தித்திட வேண்டும். சட்டத் திற்கும், நீதித்துறைக்கும் மன சாட்சி இருந்தாக வேண்டும்.
நன்றி: இந்து - தமிழில்: கே.அறம்
இந்தப் பிரச்சனை பற்றி அன்றைக்கே பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-‘இனி வருங்காலத்தில் மனித சமூகமானது இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லப்படும். மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டுள்ள அறிவியல் சாதனங்களால் சிலசில சந்தர்ப்பங்களில் பேரழிவுகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எச்சரிக்கை’
-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
போபால் விஷவாயு வழக்கு முடிந்து, எட்டு அதிகாரிகளுக்கு மட்டும் தலா இரண்டு வருடங் கள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.26 வருடங்களுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக் கசிவு கோரவிபத்தில் 25 ஆயி ரம் பேர் பலியாயினர். இன்றும் கூட, அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு நோய் களுக்கு இரையாகி வருகின் றனர். மேலும் அங்கே 350 டன் எடையுள்ள ரசாயனக் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விட்டது. குற்றத்தின் பரிமாணம் மிகமிகப் பயங்கரமானது ஆகும். ஆனால் தண்டனையோ மிக மிக லேசானதாகிப் போயிற்று. இன்றும் மேற்படி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மேலா ளரான வாரன் ஆண்டர்சன் தனது தாய்நாடான அமெரிக்கா வில் சர்வ சுதந்திரத்துடன் உலவி வருகிறார். அவர் போபால் சம்பவம் நடந்த ஒருசில மணித் துளிகளிலேயே இந்திய நாட் டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை அவ்வாறு தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? மாநில நிர் வாகிகளா, மத்திய அமைச்சர் களா என்றெல்லாம் தற்போது பட்டிமன்றம் நடந்து வருகிறது. நீதிமன்ற வளாகத்தில் எவருமே வாரன் ஆண்டர்சன் பற்றிப் பேசவேயில்லை. சர்வதேச சட்டங்களை மதிக்காத அமெரிக்கா அமெரிக்க அரசைப் பொறுத்தமட்டில் அது எந்த ஒரு சர்வதேச சட்டத்தையும் மதிப் பதே கிடையாது. அதேபோன்று உலக அரங்கில் பகாசுர பன் னாட்டு நிறுவனங்கள் புரிகின்ற குற்றச்செயல்கள் யாவும் மிக மிக அலட்சியப்படுத்தப்படுகின்றன.இந்திய மக்களைப் பொறுத்த வரை நம் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது. போபாலில் நடந்தது மிகப்பெரிய தோர் வரலாற்றுக் கொடுமை யாகும். அந்தச் சம்பவத்தைப் பற்றி அமெரிக்கர்கள் மிகவும் துச்சமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இந்தியாவைத் தங் களுடைய காலனி நாடாகக் கருதி இறுமாப்புடன் நடந்து வருகிறார்கள். நீண்ட நெடிய தாமதம்போபால் சம்பவமானது 1984ம் வருடம் நடைபெற்றது. இந்திய நீதித்துறையானது அது பற்றி விசாரித்துத் தீர்ப்பளிப்ப தற்கு 26 வருடங்கள் தேவைப் பட்டன. இது வெட்கப்படவேண் டியதோர் சங்கதியாகும். விஷவாயுக் கசிவினால் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேற்படி தொழிற்சாலை அதி காரிகள் எட்டுப்பேர்களுக்கு வெறும் 2 வருடத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் சாலையின் பிரதம நிர்வாகியைத் தப்பவிட்டுவிட்டார்களே! மேற்படி நிர்வாகிக்குத் தெரியா மல் அத்தகைய விபத்து ஏற்பட் டிருக்கவே முடியாது. தலைமை நிர்வாகி என்ற வகையில் அவர் தான் நடந்த வெங்கொடுமைக் குப் பொறுப்பேற்றிட வேண்டும்.நிர்வாகமே பொறுப்புகார்பைடு தொழிற்சாலை நிர்வாகமும், அதனுடைய தலை வராயிருந்த வாரன் ஆண்டர் சனும் நடந்தவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் அவரை எந்த ஒரு நீதிமன்றமும், விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்திய அரசாங்கமானது ஆண்டர் சனை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரு வதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேற்படி பிரச் சனையில் இந்தியப் பிரஜைகளு டைய உயிர்கள் அவ்வளவு மலி வானவையாகக் கருதப்படுவது ஏன்? ஆண்டர்சன் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 304வது பிரிவின்படி தண்டிக்கப்பட வேண்டியதோர் குற்றவாளியா வார். ஆனால் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுநாள் வரை பதிவு செய்யப்படவில் லை. ஆண்டர்சனைப் போன்ற பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய குற்றங்களுக்கு தண் டனை கிடையாதா? அப்படியா னால் நம்முடைய குற்றவியல் சட்டங்கள் யாவும் வெறும் கேலிப்பொருட்கள்தானா? விபத்துகள் பற்றிகதிர்வீச்சுகள், எரிவாயுக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் பல் வேறு விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக எண்ணிலடங்கா மனித உயிர் கள் பலியாகின்றன. அதைத் தடுத்திடுவதற்கு எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை! இது மிகவும் பரிதாபத்துக்குரியதோர் அம்சமாகும்.1984ம் வருடம் போபாலில் அத்தகையதோர் பேரழிவுதான் நடந்தேறியது. விஷவாயுக் கசிவி னால் 25 ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர். யூனியன் கார்பைடு நிர் வாகத்தையும், ஆண்டர்சனை யும் கூண்டிலேற்றியே தீரவேண் டும் என்று சகல இடதுசாரி களும் பொதுமக்களும் திரண் டெழுந்து மத்திய அரசை நிர்ப் பந்தித்திட வேண்டும். சட்டத் திற்கும், நீதித்துறைக்கும் மன சாட்சி இருந்தாக வேண்டும்.
நன்றி: இந்து - தமிழில்: கே.அறம்
இந்தப் பிரச்சனை பற்றி அன்றைக்கே பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-‘இனி வருங்காலத்தில் மனித சமூகமானது இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லப்படும். மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டுள்ள அறிவியல் சாதனங்களால் சிலசில சந்தர்ப்பங்களில் பேரழிவுகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எச்சரிக்கை’
Friday, June 18, 2010
Public Sector Shares for Sales
பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10
மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.௧௬ ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் 10 விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங் கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்கு உள் ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது ௮௫ விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து 12 மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10
மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.௧௬ ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் 10 விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங் கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்கு உள் ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது ௮௫ விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து 12 மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
Monday, June 14, 2010
ஜூலை - 15 உண்ணாவிரதப் போராட்டம்
ஜூலை 15 அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள்
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
- வரலாறு காணாத விலை வாசி உயர்வால் ஏழை மறறும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் போராட்டங்கள் மூலம் உழைக்கும் மக்கள் பெற்றுள்ள சிறு சிறு ஊதிய உயர்வுகள் கூட இதனால் பயனற்று போய்விட்டன. எனவே மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
- வேலை நிறுத்த உரிமையை சட்டபூர்வமான உரிமையாக அறிவித்திட வேண்டும்
- அரசுஊழியர்களின் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளை முடக்குவதற்கு பயன்படுத்தப்படும் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும்
-வைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 விழுக்காடாக அறிவிக்க வேண்டும்
- ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் அரசுஊழியர் சங்கம் மாறும் துறைவாரி சங்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி ஒருநபர் குழு அறிக்கையை விரைவாக அமல்படுத்திட வேண்டும்.
-அவுட் சோர்சிங் ஒப்பந்த நியமனங்களை கைவிட்டு காலி பணியிடங்களை நிரப்பிட அரசு விதித்துள்ள நிபந்தனைகளை இரத்து செய்து வேலைவாய்ப்பகம் மற்றும் தேர்வாணையம் மூலம் முறையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு விரைந்து நிரப்பிட வேண்டும்.
-ஓய்வு பெற்ற அரசுஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழிவகுக்கும் அரசு ஆணை 170-ஐ இரத்து செய்திட வேண்டும்
-புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஊழியர்களின் பொது நல நிதியாக மாற்றி உரிய வட்டி வழங்கப்பட வேண்டும்
-மத்திய அரசு போனஸ் சட்டத்தை திருத்தி போனசாக ரூ 3500 - 2006,2007,2008ஆண்டுகளுக்கு நிலுவையுடன் வழங்கி இருப்பது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
-சத்துணவு ஊழியர்கள் , அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பிட்டு திட்டத்தை தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் மூலமாக நடத்துவதை அரசே ஏற்று வேண்டும் வேண்டும் அல்லது இந்திய பொது துறை காப்பிட்டு நிறுவனங்கள் மூலமாக நடத்திட வேண்டும்
- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் தொழில் நுட்ப்ப ஊழியர்களுக்கு மத்திய அரசிற்கினையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்
- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்காலமாக கருதி வரன்முறை செய்திட வேண்டும்
- காதர் வாரியத்தில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல்கள் வெளியிட்ட வேண்டும் பொது நல நிதியில் இருந்து முன் பணம் பெற அனுமதிக்க வேண்டும்
- நகராட்சி ஊழியர்கள் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
-பல்வேறு துறைகளில் பல்லாண்டுகாலமாக பணிவரன்முறை செய்யப்படாமல் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் பணியினை ஒரு பொதுவான விதி தளர்வின் கீழ் விரைந்து வரன்முறை செய்யப்படவேண்டும் . தொகுப்பூதியத்தில் இருந்து முறையான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படும் ஊழியர்களின் கடந்தகால பணி காலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணப்பயன் பணிப்பயன் வழங்க வேண்டும்
-பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக முடிவிற்கு கொண்டுவரப்படாமல் உள்ள ஒழுங்கு நடவடிக்கை இனங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
-ஊழியர்களின் நலன் பாதிக்கப்படாமல் மாறுதல்கள் மேற்கொள்ள பொதுவான மாறுதலுக்கு உள்ள தடைக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும்.
-அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்திட உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் குழுக்கள் அமைத்திட வேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தப்படி அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் உடனடியாக வழங்கவேண்டும்.
- காலம் சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் காலி பணியிடங்களில் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும் பல்வேறு துறைகளில் ஏற்கெனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு உடன் பணி வரன் முறை செய்யப்படவேண்டும் .
-அரசியல்வாதிகளாலும் சமூக விரோதிகளாலும் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன அதனை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் கணணி இயக்குனர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் பணி வரன் முறை செய்ய வேண்டும் அவர்களுக்கு பணிவிதிகள் ஏற்படுத்தி முது நிலை அடிப்படையில் உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெரும் சூலை 15 உண்ணாவிரதப் போராட்டத்தை
திட்டமிடுவீர்! வெற்றிபெறச் செய்வீர் !
இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
Subscribe to:
Posts (Atom)